எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம் - கும்பகோண மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் நேற்று மகாமகம் குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக திருவிழா கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மகாமகத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடுவார்கள். இதற்கு முன் 2004–ம் ஆண்டு மகாமகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகாமகம் வருகிற 22–ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். இதையொட்டி நேற்று கும்பகோணத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அபிமுகேஸ்வரர் கோவிலில் முதலில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதி கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் மகாமகம் குளம் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றிலும் 16 சோடச லிங்கங்கள் அமைந்துள்ளன. 16 தானங்களை நினைவுபடுத்தும் வகையில் 16 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. குளத்தின் உள்ளே 20 தீர்த்த கிணறுகள் உள்ளன.
இங்கு மகாமகத்தின்போது புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் மகாமகத்தின்போது குளத்தில் புனித நீராட ஆர்வம் காட்டுகிறார்கள். 22–ந்தேதி தான் மகாமகம் என்றாலும் கொடியேற்றம் தொடங்கிய இன்றே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து இன்றே லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வந்து குவிந்தனர். கொடியேற்றப்பட்டதும் வெளியூர் பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் மகாமக குளத்தில் புனித நீராட தொடங்கினார்கள். தொடர்ந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி அணியாக புனித நீராடி வருகிறார்கள். கொடியேற்றத்தையொட்டி நேற்று 20 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகாமக குளத்தில் விடப்பட்டது.
ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து அமிர்த நீர் கலசம் கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு யானை முன்னே செல்ல மேள தாளம் முழங்க மகாமக குளத்தை அடைந்தது. அமிர்த நீர் கலசத்தை சிவசங்கர சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் மகாமகம் குளத்துக்குள் எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு குளத்து நீரில் கலக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாமக குளத்து நீரை கலசத்தில் எடுத்து கண்ணாடி பல்லக்கில் மீண்டும் ஊர்வலமாக ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் நெரிசல் இன்றி புனித நீராடுவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மகாமக குளத்திற்கு 4 வழிபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பாதை வழியாக முக்கிய பிரமுகர்களும், மற்றொரு பாதை வழியாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்லவும், மற்ற பாதைகளில் அனைத்து பக்தர்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக கும்பகோணத்திற்கு முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகங்கள் இயக்கி வருகிறது. சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
கும்பகோணத்தை சுற்றி 7 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதார வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக 30 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் குறுகலான தெருக்களில் செல்லும் வகையில் உள்ள 5 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாமக விழாவையொட்டி கும்பகோணம் விழாக்கோலம் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.