எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரணமடைந்ததையொட்டி தென்னிந்திய திரையுலகினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவ்ர் கலாபவன் மணி. தமிழில் ஜெமினி படத்தின் மூல அறிமுகம் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று சுய நினைவு அற்ற நிலையில் அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கலாபவன் மணி உடலில் மெத்தனால் என்ற நச்சுப் பொருள் கலந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கலாபவன் மணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகம் உள்ளது என கூறினார். இந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.
இந்த தனிப்படை நேற்று முன்தினம் இரவு கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் விசாரணையை தொடங்கியது. மேலும் நேற்று அந்த இல்லத்தில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் கலாபவன் மணி உடலில் மெத்தனால் கலந்திருந்தது என்ற புகாரை அடுத்து உடற்கூறு சோதனைக்காக அவரது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று உடற்கூறு சோதனை நடைபெற்றது. இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.
2016-ம் ஆண்டு ஆரம்பித்து முழுதாக 3 மாதம் முடியவில்லை. அதற்குள் 7 திரை நட்சத்திரங்கள் இதுவரை மலையாளத் திரையுலகில் உயிரிழந்துள்ளனர். இதில் கலாபவன் மணியும் இணைந்துள்ளார். நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா(51) கடந்த ஜனவரி 25 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மலையாளப் பாடகியான ஷான் ஜான்சன் பிப்ரவரி 5 ம் தேதி அவரது அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடந்தார். மலையாளத்தின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓஎன்வி குருப் (84) பிப்ரவரி 13 ம் தேதி உயிரிழந்தார். மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜாமணி (60) கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி இறந்து போனார். இசையமைப்பாளர் ராஜாமணி இறந்த அதே நாளில் ஒளிப்பதிவாளர் அனந்தக் குட்டன்(61) இறந்து போனார். 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனந்தக் குட்டன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 14 ம் தேதி அவர் இறந்து போனார்.
பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளை(41) பிப்ரவரி 27 ம் தேதி கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல நடிகர் கலாபவன் மணி (45) கல்லீரல் பிரச்சினை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை 7 நட்சத்திரங்கள் உயிரிழந்திருப்பதால் மலையாளத் திரையுலகில் அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.
நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தியை கேட்டு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கலாபவன் மணி. கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிர் இழந்தார். அவரது மரண செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கலாபவன் மணி என்ற சிறந்த நடிகருக்கு என் மரியாதை! நல்ல நண்பர். அவருடன் செலவிட்ட நேரத்தை மறக்கவே முடியாது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மலையாள திரையுலகின் மிகவும் திறமையான நடிகர். அவருக்கு 46 வயது தான். அண்மை காலமாக பல திறமைசாலிகளை இழந்து வருகிறோம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் கலாபவன் மணி சார்! தென்னிந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடன் சேர்ந்து பாபநாசம் படத்தில் பணியாற்றினேன். திறமைசாலி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். இசையமைப்பாளார் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
அருமையான நடிகர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் கலாபவன் மணி என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்த நடிகர் மம்மூட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். என்னால் அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. மணி சேட்டா.. நீங்கள் இன்னும் நிறைய நடிக்க வேண்டி இருந்தது. இது நியாயம் அல்ல. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். என்று ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். என் நண்பன் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தேன். மற்றும் ஒரு மலையாள சகோதரர் கல்லீரல் பிரச்சனையால் இறந்துள்ளார். மிகவும் திறமையானவர் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.