முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை தில்லுமுல்லு கட்சி என விமர்சித்த பிரேமலதாவுக்கு கருணாநிதி பதில் அளிக்காதது ஏன்? வைகோ சூடான கேள்வி

புதன்கிழமை, 16 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

நெல்லை, தி.மு.க.வை தில்லுமுல்லு கட்சி என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விமர்சனம் செய்ததற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் அளிக்காதது ஏன் என வைகோ கேளவி எழுப்பியுள்ளார்.  நெல்லையில் செய்தியாளர்களுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக கட்சி கருணாநிதியின் பிடியில் இல்லை. அவரது மகன் பிடியிலும் இல்லை. யாரோ சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் இருக்கிறது. தி.மு.க.வை தில்லுமுல்லு கட்சி என தே.மு.தி.க மகளிரணி தலைவர் பிரேமலதா விமர்சனம் செய்ததற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் அளிக்காதது ஏன்? 
மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று வசனம் எழுதியவர் பிரேமலதா விமர்சனத்துக்கு மவுனமாக இருப்பதால் அதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா? கருணாநிதிக்காக வருத்தப்படுகிறேன். அவரது அரசியல் வாழ்க்கையில் இத்தகைய ஏமாற்றம் அவர் அடைந்திருக்கமாட்டார். திமுக இன்று ஏளனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்