முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு சென்றபோது பரிதாபம்: வேன் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

புதன்கிழமை, 16 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

குண்டூர், கர்நாடக மாநிலத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் எலஹங்கா பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் திருமலை திருப்பதிக்கு யாத்திரை புறப்பட்டனர். பெங்களூரு திருப்பதி நெடுஞ்சாலையில் சந்திகிரி கோட்டை அருகே இவர்களது வேன் வந்து கொண்டிருந்தபோது, குண்டூரில் இருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். படுகாய மடைந்த வேன் ஓட்டுநர் உள்பட 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வேன் ஓட்டுநர் உறங்கியதே விபத்து ஏற்பட காரணம் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசார ணையில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்