எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தி.மு.க காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங். மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத்தே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. அடுத்த மாதம் 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 27 நாட்கள் உள்ளன. இந்தநிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஒரு அணியாகவும், தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க ஒரு அணியாகவும், பா.ஜ.க ஒரு அணியாகவும், கடைசியில் பா.ம.க ஒரு அணியாகவும் ஆக 5 முனை போட்டி இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த ஏற்கெனவே 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான அந்த குழுவில் கோபிநாத், திருநாவுக்கரசர், கருஷ்ணசாமி, தங்கபாலு, யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும் நேற்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பிறகு அவர்கள் நேராக கோபாலபுரம் புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க தரப்பில் கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துறைமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடந்தும் தி.மு.க காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த விஷயத்தில் இழுபறி நிலையே நீடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தி.மு.க விட்டுக் கொடுத்தது. 2011-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அதனால் மூத்த தலைவர்களின் நெருக்கடிக்கு தி.மு.க வளைந்து கொடுத்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. இருந்தாலும் கூட்டணிக்கு தே.மு.தி.க வராததால் காங்கிரஸ் கட்சி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கூடுதல் தொகுதிகளை கேட்கிறது. ஆனால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.வுக்கு மனமில்லை. 30 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என்று தி.மு.க கூறிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால் காங்கிரசோ குறைந்தபட்சம் 40 தொகுதிகளாவது கேட்டுப் பெறவேண்டும் என்ற மனநிலையில் உள்ளது. இந்த பேச்சை முடித்துக் கொண்டு குலாம் நபி ஆசாத் அங்கிருந்து புறப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத், ஆலோசனை நடத்தினார். முன்னதாக நிருபர்களை சந்தித்த அவர் எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறோம். நாங்களும் மேலிடத்தில் பேசுவோம் அதன்பிறகே எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். சுருக்கமாக சொன்னால் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இழுபறி நிலையே நீடிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.