முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்தை வைகோ கொச்சைப்படுத்தி விட்டார் - தமிழிசை பேட்டி

சனிக்கிழமை, 26 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தே.மு.தி.க.வை இழுக்க பாஜ பேரம் பேசியதாக வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தே.மு.தி.க.வை இழுக்க தி.மு.க.வும், பா.ஜனதாவும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால் இரு கூட்டணிகளிலும் சேராமல் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் தி.மு.க.வும், பா.ஜனதாவும் விஜயகாந்திடம் பேரம் பேசியதாக வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். பா. ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி. பதவியும், மத்திய மந்திரி பதவியும் தருவதாக விஜயகாந்திடம் பேரம் பேசப்பட்டதாக வைகோ கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வைகோவின் குற்றச்சாட்டுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:–

அரசியலுக்காக பொத்தாம் பொதுவாக வார்த்தைகளை அள்ளி வீச கூடாது. ஆதாரம் இல்லாமல், அதிகாரப்பூர்வம் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை கூறுவது சரியல்ல. வைகோ பேரம் படியவில்லை என்று கூறியிருக்கிறார். எதனால் படியவில்லை என்பதையும் அவர் விளக்கி இருக்க வேண்டும்.இதன் மூலம் வைகோ விஜயகாந்தையும் அவரது மனைவி பிரேமலதாவையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்