முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விருதை கே.பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் : சமுத்திரக்கனி பேட்டி

திங்கட்கிழமை, 28 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - 'விசாரணை' படத்துக்கான தேசிய விருதை என் குருநாதர் கே.பாலசந்தர் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்தார்.  63வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது இயக்குநர் சமுத்திரக்கனிக்கு கிடைத்தது.  இந்த விருது குறித்து இயக்குநர் சமுத்திரக்கனியிடம் கேட்டபோது, "இறைவனுக்கும் நண்பன் வெற்றிமாறனுக்கும் நன்றி.

என் குருநாதர் கே.பாலசந்தர் உனக்கு தேசிய அளவில் அங்கீகாரம் வரும் என்று அடிக்கடி சொல்வார். பாலசந்தர் ஐயா இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். இந்த விருதை என் குருநாதருக்கு சமர்ப்பிக்கிறேன். எடிட்டர் கிஷோருக்கு விருது கிடைத்தது தான் மிகவும் மகிழ்ச்சி. கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.

நடிகர் தினேஷ், கிஷோர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே கஷ்டப்பட்டு நடித்திருந்தார்கள். இப்படத்துக்காக உண்மையாக உறுதியாக உழைத்த எல்லாருக்குமே விருது கிடைத்திருக்க வேண்டும். ரொம்ப இஷ்டப்பட்டு கடினமான பாதைகளை கடந்து வந்தோம். இந்த விருதில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்