முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர்: தமிழில் சிறந்த படம் விசாரணை: நடிகை ரித்திகாவிற்கு சிறப்பு விருது

திங்கட்கிழமை, 28 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி:  தேசிய விருது பட்டியலில் இயக்குனர் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். தமிழில் சிறந்த படமாக விசாரணை படம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த நடிகையாக ரித்திகா சிங் தேர்வு செய்யப்பட்டார். 2015ம் ஆண்டிற்கான 63வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார்.

செய்யாத குற்றத்திற்காக ஆந்திரா சிறையில் வாடும அப்பாவி தமிழர்கள் போலீஸ் சித்ரவதைக்கு ஆளாவதை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. போலீஸ் வட்டாரத்தில் இந்த படம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.  இவர் தமிழக போலீசாக ஆந்திராவிற்கு வந்து அங்குள்ள கிஷோரை தூக்குவதிலும் கிஷோரின் நிலையை கண்டு பதறும் இடங்களிலும் சமுத்திரக்கனி இயல்பாக நடித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்