முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் வேட்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் தொண்டரை அடித்த விஜயகாந்த்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சேலம் : சேலத்தில் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்  தொண்டரை அடித்தார் விஜயகாந்த். தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி, த.மா.கா.வுடன் இணைந்து தே.மு.தி.க. 104தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். நேற்று சேலத்தில் முகாமிட்ட விஜயகாந்த் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம்  5ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்குஅனுமதி தரப்படவில்லை. கூட்டம் தொடங்கியவுடன்  தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சேகர் ஒரு வீடியோ கிராபருடன் மண்டபத்திற்கு வந்தார். அவர்களை தே.மு.தி.க.வினர் தடுத்து நிறுத்தி உள்ளே வரவிடாமல் வாக்குவாதம் செய்தார்கள். கட்சியின் தலைமை நிர்வாகிகள் உத்தரவின்படி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்திற்கு விஜயகாந்த் காலை 11.35மணிக்கு வந்திறங்கினார். பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது கோபம் அடைந்த விஜய காந்த் அருகில் இடித்து கொண்டிருந்த நபரை அடிக்க கை ஓங்கினார்.

இதன் பிறகு மண்டபத்திற்குள் செல்ல விஜய காந்த் உள்ளே நுழையும் போது ஒரு தொலைக்காட்சி நிருபர் அவரிடம் மைக்கை நீட்டினார். அதற்கு அவர் பதிலளிக்காமல் உள்ளே சென்றார். அப்போது விஜயகாந்தை இடித்தபடியே ஒரு தொண்டர் வந்தார். அவரை விஜயகாந்த் அடித்தார்.  இதனால் அந்த தொண்டர் அதிர்ச்சி அடைந்து நின்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்