எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தேர்தலில் சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கை, கண்காணித்தல், பணம் பறிமுதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதையும் வாக்காளர்களை கவர்வதற்கான வாய்ப்பையும் தடுக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ மூலமான கண்காணிப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும்.
* காவல்துறை மட்டுமின்றி, வருமான வரித்துறையின் விசாரணை இயக்குநரகம், சுங்கவரித் துறை போன்ற இதர அமைப்புகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறையின்போதும் மதுபானம், போதைப் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேமிப்பு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும்படி மாநில கலால் வரித் துறையும் காவல்துறை அதிகாரிகளும் பணிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 4, 2016 தேதியிலிருந்து 702 பறக்கும் படைகள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலுமாக மொத்தம் 712 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோதமான வகையில் பணம், மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது குறித்த புகார்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் குறித்த அதிகாரபூர்வமான அறிவிக்கை ஏப்ரல் 22, 2016 அன்று வெளியிடப்பட்டது. பணத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சிகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப் பிரிவுகளையும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.
சோதனை மேற்கொள்வது, பறிமுதல் செய்வது போன்றவை உள்ளிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதிலும் விரிவான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. * தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 22, 2016 அன்று தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
புலன்விசாரணை பிரிவு உருவாக்கியிருந்த தகவல் தெரிவிக்கும் ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் (சுமார்) ரூ. 5. 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் வழக்கமான வணிக ரீதியான செயல்களுக்குத் தொடர்புடையதல்ல என்பதோடு, இதில் பெரும்பகுதியானது ஹவாலா நடவடிக்கைகளோடு தொடர்புடையது எனவும் சந்தேகிக்கப்படுவதோடு, இதில் பெரும்பகுதியானது வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
* அதே நாளில், அதாவது ஏப்ரல் 22, 2016 அன்று, முன்கூட்டியே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையில் ரூ. 4.72 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. வேட்டிகள், சேலைகள் போன்ற வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் பதுக்கிவைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ரூ. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள் இந்தப் பணம் கைப்பற்றப்பட்ட அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை வேறெங்கும் கொண்டு செல்லாதவாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
*மேலும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படையானது ஏப்ரல் 22, 2016 அன்று இரு மாநில போக்குவரத்து பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த, எவ்வித ஆதாரமும் இன்றி பணத்தை வைத்திருந்த இரு பயணிகளிடமிருந்து ரூ. 1.35 கோடி பணம் கைப்பற்றியது.
* இதற்கு முன்பாக, மார்ச் 2016 -ல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, பல்வேறு செலவுகளை கண்காணிக்கும் குழுக்களால் மொத்தம் ரூ. 35.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் செயல்பாடுகள் நடைபெற்று வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துமாறும், தேர்தல் நடைமுறையில் கணக்கில் வராத பணத்தை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் இதுபோன்ற சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. * பணம், மது, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திச் செல்வது மிகக் கண்டிப்பான வகையில் கண்காணிக்கப்படும். வாக்காளர்களை கையூட்டின் மூலம் கவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இத்தகைய செயல்கள் அனைத்திலும் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவுகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்களில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் பாரபட்சமாக நடப்பதை மிகவும் கடுமையாக கருதப்படும் என்பதோடு அத்தகைய தவறுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தேர்தலில் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகள் குறித்த தனது நடைமுறை உத்தியையும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது; பறக்கும் படைகளில் மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களை இணைத்துக் கொள்வது; மத்திய காவல்படைப் பிரிவுகளின் அலுவலர்களையும் இவற்றில் இணைத்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும்.
* இத்தகைய தயாரிப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்க மாநிலத்தில் சிறப்பு பார்வையாளர்களின் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்கள், பறக்கும் படைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தீவிர பங்கேற்பதற்காக இந்திய காவல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயிற்சி அலுவலர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* நியாயமான முறையில் வாக்களிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும்படியும், நியாயமான வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் மத்தியில் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. A
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.