எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவருக்கு வழிநெடுக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா காரில் ஏறி நின்று மக்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இரட்டை விரலை காட்டினார்.அப்போது மக்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு என்று உற்சாகமாக குரல் எழுப்பி உறுதி கூறினார்கள்.
அடுத்த மாதம் 16-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதி 7 தொகுதிகள் அ.தி.மு.க. தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. முதல் முறையாக 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான இரட்டை இலை களத்தில் உள்ளது.
வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி அன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களில் ஜெயலலிதா பேசினார்.
நேற்று முன்தினம் திருச்சியில் 7-வது நாளாக பிரச்சாரம் செய்தார்.முதல்வர் ஜெயலலிதா பேசும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் லட்சோபலட்சம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய தனது போயஸ் இல்ல தோட்டத்தில் இருந்து 12.05 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டார். அப்போது மகளிர் அணியை சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். ராதாகிருஷ்ணன் சாலை, மெரீனா கடற்கரை சாலை, பர்மாபஜார், ராயபுரம் பாலம், காசிமேடு வழியாக தண்டையார்பேட்டைக்கு முதல்வர் ஜெயலலிதா 12.22 மணிக்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை அவர் செய்தார்.
பின்னர் உறுதிமொழி படித்து அந்த உறுதிமொழி படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு அங்கிருந்து புறப்பட்டார். காரில் ஏற வந்தபோது அங்கு திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் விண்ணதிர வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது மக்களை பார்த்து ‘இரட்டை விரலை’ மகிழ்ச்சியுடன் காட்டினார். பின்னர் காரில் ஏறியபோதும் காரில் நின்று கொண்டு சிரித்தபடியே இரட்டை விரலை காட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், ‘அம்மா இரட்டை இலைக்குதான் ஓட்டு’ என்று உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் இரட்டை இலைகளையும், இரண்டு விரல்களையும் காட்டி உறுதி அளித்தார்கள். பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற வழியெல்லாம் மக்கள் திரண்டிருந்தனர். எனவே அவரது கார் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. காரில் சென்று ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் வழங்கிய மலர்கொத்துக்களை பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள், நிர்வாகிகளை அழைத்து பேசினார். வேட்புமனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா வந்தபோது வழிநெடுக மக்கள் கூடியிருந்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தார்கள். ‘அம்மா வாழ்க’ என்று வாழ்த்து கோஷமிட்டனர். செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க கிராமிய நடனங்களுடன் ஜெயலலிதாவுக்கு எழுச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பர்மாபஜாரில் வணிகர்கள் அன்புடன் வரவேற்றார்கள். மீனவர்கள், இஸ்லாமியர்கள் பெருமளவில் திரண்டிருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் திரண்டு நின்று வரவேற்றார்கள். வழக்கறிஞர்கள் அணி தலைவர் வி.எஸ்.சேதுராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்.
அண்ணா தொழிற்சங்கத்தினர், மாநகர அண்ணா போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தினர் செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் அதி.மு.க. தொழிற்சங்க கொடிகளை ஏந்தி கோஷம் எழுப்பி வரவேற்றார்கள். கடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதன்பின் இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா 2–ம் முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். தங்கள் தொகுதி முதலமைச்சர் தொகுதி என்பதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட கூடுதலாக வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்ய தொகுதி மக்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.