எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை : புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவரப்படும் என்றும், விலையில்லா மிக்சி. கிரைண்டர் மற்றும் மி்ன்விசிறிகள் வழங்கப்படும் என்றும், தமிழகத்தை போல் புதுவையிலும் அனைத்து சமூக நலத் திட்டங்கள் வழங்கப்படும் என அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
புதுச்சேரியில் போட்டியிடும் 30 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான, தமிழ்நாட்டிலேயே இவ்வளவு பெரிய வளர்ச்சியை, திட்டங்களை எங்களால் கொடுக்க முடிந்து இருக்கிறது என்றால், சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியை வளர்ச்சியுறச் செய்வது எங்களுக்கு மிக எளிது. அ.தி.மு.க. ஆட்சி புதுச்சேரியில் அமையப்பெற்றால், புதுச்சேரிக்கு நிதி சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்தைபெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி அரசின் கடன் சுமையான 6,400 கோடி ரூபாயை முற்றிலும் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரிக்கென புதிய தொழில் கொள்கையினை உருவாக்கி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும், இடம் பெயர்ந்த தொழிற்சாலைகளைமீண்டும் கொண்டு வரவும், நலிந்த தொழிற்சாலைகளை வலுவடையச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு தொழில்கள் துவங்க ஊக்கம்அளிக்கப்படும். அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒற்றை சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் தொழில் வளாகம் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ளது போல், புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படும். செயல்படாத நிலையில் உள்ள புதுச்சேரி விமான நிலையத்தை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாணவ, மாணவியருக்கு அனைத்துக் கல்வி உபகரணங்களும் விலையில்லாமல் வழங்கப்படும். தமிழ்நாட்டில் வழங்குவது போல், இலவசமாக விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீறுடைகள், காலணிகள், அட்லஸ்கள், வரைபடங்கள், ஜாமெட்ரி பாக்சுகள், புத்தகப் பைகள், கலர் பென்சில், கிரேயான்கள் அனைத்தும் வழங்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக மிதி வண்டிகளும்,
மடிக்கணினிகளும் வழங்கப்படும். மத்திய பல்கலைக்கழகத்தில் 50 விழுக்காடு இடங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியிலும் செயல்படுத்தப்படும். தமிழ் நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகின்றன.
அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். கைவிடப்பட்ட பெண்கள், ஏழைத் தாய்மார்கள், பெண்கள் குடும்பத் தலைவராக இருக்கின்ற குடும்பங்களுக்கு கறவைப் பசுக்களும், வெள்ளாடுகளும் தமிழ் நாட்டில் வழங்கப்படுகின்றன. அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். மகளிர் திருமண உதவித் திட்டம் இங்கேயும் செயல்படுத்தப்படும்.
தமிழ் நாட்டில் வழங்கப்படுவது போல் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். திருமண உதவியாக பெண்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். பட்டப் படிப்பு அல்லது பட்டயம் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை இங்கேயும் செயல்படுத்தப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கப்படும். அவர்கள் சொந்த தொழில் துவங்க வங்கிக் கடன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புதுச்சேரி காரைக்காலில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுவதோடு, அங்கேயே உயர் சிகிச்சைகள் பெறுவதற்கான வசதிகள் உருவாக்கித் தரப்படும். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 மருத்துவ இடங்கள் 250 ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதே போன்று மருத்துவ மேற்படிப்பிற்கான இடங்களும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவியருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்யப்படும்.காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று துவங்கப்படும். புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அன்னதானத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் வாழும் இந்துக்களுக்கு மானசரோவர் மற்றும் முக்திநாத் செல்ல மானியம் வழங்கப்படுகிறது. அந்தச் சலுகைகள் புதுச்சேரியிலும் வழங்கப்படும். திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதோடு, ஸ்ரீரங்கத்தில் உள்ளது போன்று இங்கு யாத்ரி நிவாஸ் அமைத்துத் தரப்படும்.ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும். இஸ்லாமியர்களுக்கும், ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும், தமிழகத்தில் வழங்கப்படுவது போன்ற சலுகைகள் புதுச்சேரியிலும் வழங்கப்படும். மூடிக் கிடக்கும் ரோடியர், சுதேசி, பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகள் புனரமைக்கப்பட்டு அங்கு பணி புரிந்த 15,000 தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
ஏழை எளியோர் நலம் பெறும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடிகள் ஆகிய திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்தப்படும். புதுச்சேரி மாநில காவல் துறை நவீனப்படுத்தப்படும். ஏழை, எளிய மக்கள் உயர் சிகிச்சைக்காக தமிழ் நாட்டில் உள்ளது போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கவும், மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை,கோதுமை ஆகியவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக கிடைத்திட வழி வகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.