முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்: நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

கரூர், இலங்கைத் தமிழர்கள், இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் பொதுமக்களிடையே பேசியதாவது,
முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளார். இது தமிழக மக்களுக்கு தெரியும். திமுகவினர் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார். நாவை அடக்கு இல்லை என்றால் அடக்க வேண்டிய நிலை வரும் என்று ஸ்டாலினை நான் எச்சரிக்கின்றேன். கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்றார். ஆனால் பழம் நழுவி பாதாளத்தில் விழுந்து விட்டது. வைகோ அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறார் என்றார்கள். ஆமாம். மண்ணாங்கட்டியை கண்டாலும் கூட வைகோ உணர்ச்சிவசப்படுவார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை நிறுத்திய ஒரே இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் கூட இது மாதிரி சம்பவம் நடைபெற்றதில்லை. முதல்வர் ஜெயலலிதா தனி மனித ராணுவம் போல் தலை நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியின் பிடியில் சிக்கித்தவித்த தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி தலைநிமிர்ந்து நிற்க செய்தார். கரூரை பொறுத்தவரை காவிரி கூட்டுகுடிநீர்த்திட்டம், பசுபதிபாளையம் உயர்மட்ட பாலம், அரசு மருத்துவக்கல்லூரி என பல்வேறு திட்டங்களை செய்து முடித்துள்ளார்.

கருணாநிதி ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறினார். தந்தாரா இல்லை. வித்தியாசமான திருடர் கருணாநிதி. தமிழகத்தில் கொள்ளை அடித்தது போதாது என்று டெல்லியிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்து இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டனர். இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். எனவே வருகின்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் டெப்பாசிட்டை இழப்பது உறுதி. மீண்டும் முதல்வர் ஜெயலலிதா முதல்வர் அறியணையில் அமரும் போது உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபாஸ்கர் கையில் அச்சாரத்தை கொடுத்து அனுப்புங்கள் என்று உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் யாசகம் கேட்கிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். நிகழ்ச்சியின் போது கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் திரளராக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago