எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை மதுரை வருகிறார். பாண்டிகோவில் ரிங்ரோடு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த சாதனையை அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நிகழ்த்தி உள்ளார். அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா 21 வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 2-வது நாளாக விருத்தாசலத்தில் 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 3-வது நாளாக தர்மபுரியில் 11 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், நான்காவது நாளாக அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 5-வது நாளாக காஞ்சிபுரத்தில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 6-வது நாளாக சேலத்தில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 7-வது நாளாக திருச்சியில் 67 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 8-வது நாளாக பாண்டிச்சேரியில் 30 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஒரு இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை அடுத்த இடத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டம் மிஞ்சும் அளவிற்கு மக்கள் திரண்டு முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் தந்து வருகிறார்கள்.
இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளையும் அந்தந்த தொகுதிகளில் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களையும் பட்டியலிட்டு ஆதாரத்துடன் முதல்வர் ஜெயலலிதா பேசுவதை மக்கள் கவனமாக கேட்கிறார்கள். அவரது பேச்சு மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதை போலவும், வானத்தை கிழித்து வையகத்தை காட்டுவேன் என்பதை போலவும், மதுவை கொண்டு வந்து தமிழ் சமுதாயத்தின் தலைமுறையை பாலாக்கிய கருணாநிதி, மதுவிலக்கை உடனே அமுல்படுத்துவேன் என்று கூறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து, படிப்படியாக தான் மதுவிலக்கை கொண்டு பூரண மதுவிலக்கை நிச்சயமாக கொண்டு வருவேன் என்று பிரச்சாரக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார். இந்த உத்திரவாத்தை மக்கள் வரவேற்று வருகிறார்கள்.
அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 9-வது நாளாக இன்று மாலை மதுரையில் நடக்கிறது. பாண்டிகோவில் ரிங்ரோட்டில் நடைபெறும் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரையாற்றுகிறார். மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க லட்சோபலட்சம் மக்கள் திரளுகிறார்கள். இதற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல், அலங்கார வரவேற்பு வளைவுகள், நுழைவு வாயில் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. அலைகடலென திரண்டு வரும் மக்கள் எவ்வித சிரமும் இன்றி முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்கவும், அவரை நேரில் பார்க்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் நடைபெறும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 24 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகிறார். மதுரை கிழக்கு - தக்கார் பாண்டி, மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு - வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன், மதுரை மத்தி - மா.ஜெயபால், சோழவந்தான் - கே.மாணிக்கம், திருப்பரங்குன்றம் - எஸ்.எம்.சீனிவேல், திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி - நீதிபதி, ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் - கதிர்காமு, போடி - ஒ.பன்னீர்செல்வம், கம்பம் - எஸ்.டி.கே.ஜக்கையன், பழனி - குமாரசாமி, ஒட்டன்சத்திரம் - கிட்டுச்சாமி, ஆத்தூர் - ஆர்.விசுவநாதன், நிலக்கோட்டை - தங்கத்துரை, நத்தம் - ஷாஜகான், திண்டுக்கல் - சீனிவாசன், வேடசந்தூர் - பரமசிவம், காரைக்குடி - கற்பகம் இளங்கோ, திருப்பத்தூர் - அசோகன், திருவாடானை - நடிகர் கருணாஸ் ஆகிய 24 வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா இந்த பிரச்சார கூட்டத்தில் அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இன்று மதுரை வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன்,செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், எம்.பி, எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் அம்மா திடலில் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ராட்சத பலூன்களை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை பறக்கவிட்டனர். முன்னதாக மேடை மற்றும் பொதுமக்கள் அமரும் இடங்களை அவர்கள் சுற்றிபார்த்து பணிகளை ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், துணை மேயர் திரவியம், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம்,வில்லாபுரம் ஜெ.ராஜா, வேட்பாளர்கள் கே.மாணிக்கம், மா.ஜெயபால், எஸ்.எஸ்.சரவணன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, சண்முகவள்ளி, பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், நிலையூர் முருகன், ஜி.என்.அன்பு செழியன், ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா, வட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.