முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவரோடும்–நபரோடும் வந்த வைகோ திரும்பி சென்றது ஏன்?: தமிழிசை கேள்வி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை,  கவரோடும்–நபரோடும் வந்த வைகோ திரும்பி சென்றது ஏன் என்று டாக்டர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–

மக்கள் நலக்கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது. அந்த குழப்பத்தின் முதல் கட்டம் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மக்களிடம் அந்த கூட்டணி மீது நம்பிக்கையின்மை மேலும் அதிகரிக்கும்.அவர்களால் தமிழக அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.வைகோ மனுதாக்கல் செய்யாதது கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், ஞானதேசிகன் உள்ளிட்டோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ இந்த கருத்தை ஒருங்கிணைக்கவில்லையா? அல்லது அவர்களுக்குள் இணைப்பு இல்லையா?அல்லது முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற குழப்பமா? வைகோ மனுதாக்கலுக்கு கவரோடும், மாற்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நபரோடும்தான் வந்திருக்கிறார். அப்படியானால் அவர் திட்டமிட்டுத்தான் வந்திருக்கிறார். வெற்றிகரமாக தேர்தலை சந்திக்க முடியாது. வெற்றி பெறமுடியாது என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்