முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோள் இன்று (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட் டவுன்’ நேற்று முன் தீனம் தொடங்கியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இப்போது 7–வது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை  அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட் ஏவுவதற்கான ‘கவுண்ட் டவுன்’ நேற்று முன் தீனம்  காலை தொடங்கியது.  இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-   பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று   பகல் 12–50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து 51½ மணி நேர ‘கவுண்ட் டவுன்’  (நேற்றுமுன் தீனம் ) காலை 9–20 மணிக்கு தொடங்கியது. 598 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.இந்தியா தன்னிறைவுஇந்த ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–ஜி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினால் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து இத்தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துவிடும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்