முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப்  5 மாகாணங்களிலும், ஹிலாரி 4 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து குயடிரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப்  போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதுபோல் ஜனாநாயக கட்சி சார்பில் கிளாரி போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக  கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு  கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில்  உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாகாணங்களில் கட்சி  நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் டிரம்ப் வெற்றியை  தடுக்க அவரை எதிர்த்து  போட்டியிடும் டெட் குரூஸ், ஜெயின் காசிக் ஆகியோர் கூட்டணி அமைத்து இருந்தனர். இருந்தும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்த 5 மாகாணங்களிலும் டொனால்டு  டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம்  அவர் வேட்பாளர் தேர்வில் பெற வேண்டிய 1237 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை நெருங்கி விட்டார்.

எனவே, குயடிரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் தான் என அறிவித்து கொண்டார். நேற்று முன்தினம் 5 மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 4 மாகாணங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ரோத் ஐலேண்டில் மட்டும் வென்றார். இதன் மூலம் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்