முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

புனே அணி 34 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் புனே அணி விளையாடிய போது 2 முறை மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கணக்கிடப்பட்டது. 11 ஓவர் படி புனே அணிக்கு 61 ரன் இலக்காக இருந்தது. ஆனால் 94 ரன்கள் எடுத்துவிட்டதால் 34 ரன்னில் புனே அணி வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் டோனி கூறியதாவது:– இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. 4 புள்ளிகளுடன் சில அணிகளே இருக்கின்றன.

மழை காரணமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. மழை இல்லாவிட்டாலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு இருப்போம். நாங்கள் முதலில் பந்துவீசவே முடிவு செய்து இருந்தோம். ஏனென்றால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதை பயன்படுத்தி எங்களது பவுலர்கள் சிறப்பாக வீசினார்கள். அனைத்து பந்து வீச்சாளர்களும் நேர்த்தியுடன் வீசினார்கள். அஸ்வின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது பீல்டிங்கும் நன்றாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 6–வது ஆட்டத்தில் 3–வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, நாங்கள் எதிர்பாராதது நடந்துவிட்டது. புனே அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. விக்கெட்டுகள் சரிந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. யுவராஜ், வில்லியம்சன் விரைவில் அணிக்கு திரும்புவார்கள் என்றார். புனே அணி 7–வது ஆட்டத்தில் குஜராத்தை 29–ந்தேதியும், ஐதராபாத் அணி பெங்களூரை 30–ந்தேதியும் சந்திக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்