முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்வித்தை உலக கோப்பை தொடர் தகுதிச்சுற்று : உலக சாதனையை சமன் செய்தார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

ஷாங்காய்  - சீனாவின் ஷாங்காய்  நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஷாங்காய்  நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, மொத்தம் 720 புள்ளிகளுக்கு 686 புள்ளிகள் பெற்றார்.

இதன் மூலம், கடந்த ஆண்டு குவங்ஜூ உலக பல்கலைக்கழகம் விளையாட்டுப் போட்டிகளின் போது தென் கொரியா வீராங்கனை கி போ பே நிகழ்த்திய உலக சாதனையை சமன் செய்துள்ளார். போட்டியின் இடைவெளியின்போது, உலக சாதனை முறியடிக்க தீபிகா குமாரிக்கு 343 புள்ளிகள் தேவைப்பட்டிருந்தது.

ஆனால், போட்டியின் முடிவில் தீபிகா குமாரி 342 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து பெருமை சோ்த்தார்.  கடந்த 2014-ம் ஆண்டு போலந்து நாட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தமைமையிலான இந்தியா பெண்கள் வில்வித்தை அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்