முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரைஇறுதிக்கு சாய்னா நேவால் முன்னேறினார்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

வுகன்:  சீனாவில் நடந்து வரும் ஆசியா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறினார்.  சீனாவில் உள்ள வுகன் நகரில்  2லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

இந்த பந்தயத்தின் அரை  இறுதிக்கு சாய்னா நேவால் முன்னேறினார். ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற 26வயது இந்திய  வீராங்கனை சாய்னா நேவால் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் சீனாவின் முன்னாள் உலக சாம்பியன் வீராங்கனை ஷிக்சியான் வாங்கை 21-16, 21- 19 செட் கணக்கில் வீழ்த்தினார். 

இந்த ஆட்டம்  56நிமிடம் நடந்தது.  உலக பாட்மிண்டன் அரங்கில் 8வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால்  ஏற்கனவே நடந்த சுவிஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட், இந்தியா சூப்பர் சீரிஸ், மலேசியா சூப்பர் சீரிஸ், ஆகிய போட்டிகளில் அரை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தார்.

அவர் சிங்கப்பூர் ஓபன் போட்டியில் ஆடவில்லை. சீன வீராங்கனை வாங்குடன் சாய்னா நேவால் இதற்கு முன்னர் இரு முறை  தோற்றுள்ளார். நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில்  தொடக்க கேமில் சாய்னா 3-0 கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார்.

பின்னர் 11-10 என்ற குறுகிய முன்னிலை அடைந்தார். பின்னர்அவர் நேரடி புள்ளிகள் மூலம்  15-10 கணக்கில் முன்னிலை பெற்றார். இந்த நிலையில் சீன வீராங்கனை வாங் தனது போராட்டத்தின் மூலம் சாய்னாவின் முன்னிலையை 16-17என குறைததார். இருப்பினும் சாய்னா தொடர்ந்து அற்புதமாக ஆடி 21-16 கணக்கில் செட்டை கைப்பற்றினார்.

அதேப்போன்று சாய்னா நேவால் தனது இரண்டாவது செட்டை  21-19 கணக்கில் கைப்பற்றினார். இரு செட்டுகளை தொடர்ந்து கைப்பற்றிய சாய்னா நேவால் வெற்றியையும் எட்டினார். இந்த வெற்றியால் அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்