எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் - செம்மரங்களை வெட்டியதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 172 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது மற்றும் சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு வேண்டிய நிவாரண உதவியை வழங்கியது அ.தி.ம.க. அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் துன்பத்திற்கு உள்ளானால், ஓடோடிச் சென்று அவர்களை அரவணைத்து, பாதுகாத்து உதவிகளை வழங்குவது எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு தான். இலங்கையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் என்றாலும், ஒடிஸாவில் புயல் மழையில் தத்தளித்த மீனவர்கள் என்றாலும், இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், ஈரான் சவுதி அரேபியா வங்காள தேசம் சேஷல்ஸ் என பல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், உத்தரகாண்ட் மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் சிக்கியவர்கள் என்றாலும் அவர்களை எல்லாம் காப்பாற்றி தேவையான உதவிகளை அளித்தது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான்.
இது போன்றே, ஆந்திர மாநில வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்தவுடன், அவர்களைப் பற்றிய விவரங்களை ஆந்திர காவல் துறையினர் இடமிருந்து பெறுமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டேன்.
ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களின் விவரங்கள் பெறப்பட்ட பின்னர், அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்கும்படி ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் நான் கடிதம் எழுதினேன். ஆந்திர முதல்வருடன் நான் தொலைபேசியிலும் பேசினேன். ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களை பிணையில் கொண்டு வர இரண்டு அரசு வழக்கறிஞர்களின் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்றை நான் அனுப்பி வைத்தேன். இந்த வழக்கறிஞர் குழு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆந்திர சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.
2013-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வன அலுவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 288 தமிழர்கள் மீது செம்மரக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டு திருப்பதியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தலைமையிலான வழக்கறிஞர் குழு திருப்பதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த வழக்குகளில் சரியான வாதங்களை எடுத்து வைத்து, இவர்கள் விடுதலைக்கு வழி காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர்கள் குழு நவம்பர் 2015 முதல் நடைபெற்ற 20 நீதிமன்ற விசாரணைகளின் போது திறமையான வாதங்களை எடுத்து வைத்தனர்.
அதன் காரணமாக 288 அப்பாவி தமிழர்கள் கடந்த பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டனர். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த மனித உரிமை மீறல் குற்றம் நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அ.திம.க. அரசு மேற்கொண்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசால் நிவாரணமாக வழங்கப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இறந்த 20 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. தி.மு.க.-வைப் பொறுத்தவரை மற்றவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு தாங்கள் தான் காரணம் என பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். அதே போன்று இந்த சம்பவங்களிலும் தி.மு.க-வினர் தான் நடவடிக்கை எடுத்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நன்மை செய்தவர் யார் என்று நன்றாகத் தெரியும். தி.மு.க.-வின் பொய் பிரச்சாரங்களை கண்டு ஏமாந்து விட இங்குள்ள மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.