முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.கவில் இணைந்தனர்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம், விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் அ.தி.மு.கவில் இணைந்தனர்.

நேற்று விழுப்புர பொதுக்கூட்ட மேடையில், கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், கோலியனூர் கிழக்கு ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் குணசேகரன், காணை ஒன்றிய ம.தி.மு.க துணைச் செயலாளர் சுப்பிரமணி, பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பருதிபுரம் சர்க்கரை, விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் பாரதிராஜா, புதிய தமிழகம் கட்சியின் விழுப்புரம் மாவட்டப் பொருளாளர் அய்யனார், தி.மு.க.-வைச் சேர்ந்த சின்ன சேலம் பேரூராட்சி 15-ஆவது வார்டு உறுப்பினர் ஜெயமணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கராபுரம் தொகுதிச் செயலாளர்  நடராஜன், சின்ன சேலம் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன், பா.ம.க-வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி ஒன்றிய துணைத் தலைவர் சின்னசாமி, தேமுதிக-வைச் சேர்ந்த கல்வராயன்மலை தெற்கு ஒன்றியப் பொருளாளர் பாட்டுக்காரன் ராமச்சந்திரன், கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பாபு, சின்ன சேலம் ஒன்றிய துணைச் செயலாளர் கே. ராமு ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்