முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

மும்பை, மும்பையில் நேற்று மதியம் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட் சாலையில் உள்ள கமதிபுரத்தில் உள்ள 3 அடுக்குமாடிக் கட்டிடம் நேற்று மதியம் 2 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலிருந்து இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பை நகராட்சி அலுவலகத் தகவல்களின் படி காயமடைந்த இருவர் மருத்துவமனியில் உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வரும் மற்ற மூவரின் நிலைமையும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீர் மதுபான பார் மற்றும் சிறு தொழிற்கூடம் ஆகியவை உள்ள இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.  மீட்புப் பணிகளுக்காக 8 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 3 அவசர சிகிச்சை உதவி வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்