முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமூல் தொண்டரை தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் நடிகை ரூபா கங்குலி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தொண்டரை தாக்கியது தொடர்பான வழக்கில் பாஜக வேட்பாளர் நடிகை ரூபா கங்குலி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

ஹவுரா வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ரூபா கங்குலி போட்டியிடுகிறார். கடந்த 25-ம் தேதி நடந்த நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சால்கியா வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலில் திரிணாமூல் தொண்டர் சோமா தாஸை நடிகை ரூபா கங்குலி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹவுரா நீதிமன்றத்தில் ரூபா சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

 இதனிடையே, நேற்று மேற்கு வங்கத்தில் 5-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓட்டுபதிவு நடந்த 53 தொகுதிகளில் முதல்வர் மம்தா பேனர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியும் அடங்கும். மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தீபா முன்சி நிறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று மம்தா பேனர்ஜி தனது வாக்கை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்