முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டரை விடுதலை செய்ய வேண்டும் : பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டரை விடுதலை செய்யவேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி, பென்டகன் ராணுவ தலைமையகத்தையும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தையும் தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு, தாக்கினர். 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்களை பின்னணியில் இருந்து இயக்கியவர், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன்.

இந்த பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றது. பின்லேடன் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தவர், டாக்டர் அப்ரிடி. அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது,
டாக்டர் அப்ரிடி நல்லவிதமாக நடத்தப்படுவார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று பாகிஸ்தான் உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனால் அவர் நேர்மைக்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அவரை விடுதலை செய்வது குறித்து பாகிஸ்தான் எந்த உறுதியும் தரவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்