முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து வீரர் மெஸ்சி பாராட்டப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு மிரட்டல் : ஆப்கனை விட்டு வெளியேறினார்கள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      உலகம்
Image Unavailable

காபூல் -  உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்சியால் பாராட்டப்பட்டு மெஸ்சியின் கையெழுத்து போடப்பட்ட பனியனை பெற்ற 5வயது சிறுவன் குடும்பத்திற்கு மிரட்டல் வந்துள்ளது . இதனைத்தொடர்ந்து அவர்களது குடும்பம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பாகிஸ்தானில் குடியேறியது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5வயது சிறுவன் கால்பந்து வீரர்  மெஸ்சியின் 10 நம்பர் சட்டையுடன் வீதிகளில் விளையாடி வந்தான் ,

இதனைப் பற்றி கேள்வி பட்ட மெஸ்சி அந்த சிறுவனுக்கு  தனது 10ம் நம்பர் சட்டை பனியனில் ஆட்டோ கிராப் போட்டு பரிசாக அனுப்பி வைத்தார்.  இந்த பனியனை பரிசாக பெற்றதில் இருந்து அந்த சிறுவன் குடும்பத்திற்கு தொலைபேசிகளில் தொடர்ந்து மிரட்டல் வருகிறது. இதனால் அந்த சிறுவனின் தந்தை முகமது ஆரிப் அகமதி தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானுக்கு குடியேறினார். குவெட்டா நகரில் குடியேறிய அவர்கள் அங்கு நல்ல வாழ்க்கை அமையும் என எதிர்பார்க்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்