முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சானியா மிர்சாவின் சுயசரிதை நூல் - ஜூலை மாதம் வெளியாகிறது

புதன்கிழமை, 4 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை நூல் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பவர் இந்தியாவின் சானியா மிர்சா. 19-வது வயதில் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதில் இருந்து பிரபலம் ஆனார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் முத்திரை பதித்த அவர், மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து தொடர்ந்து 41 வெற்றிகளை பதிவு செய்ததுடன், மகளிர் இரட்டையர் தரவரிசையில் உலகின் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா தனது சுயசரிதையை எழுதியுள்ளார். இதில் தனது டென்னிஸ் அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தை ஜூலை மாதம் வெளியிட ஹார்பர் கொலின்ஸ் பதிப்பகம் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி ஹார்பர் கொலின்ஸ் பதிப்பகத்தின் தலைமை ஆசிரியரான கார்த்திகா கூறுகையில்.,
டென்னிஸ் விளையாட்டில் அசாதாரண சாதனை படைத்துள்ள சானியாவின் சுய சரிதை பலருக்கு உந்துசக்தியாக இருக்கும். அவரது சுயசரிதையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்றார். இதுபற்றி சானியா கூறும்போது, ‘இந்த புத்தகம் அடுத்த தலைமுறை டென்னிஸ் வீரர்களுக்கு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். என் கதை ஒரு இளைஞனையாவது ஊக்குவித்து எதிர்காலத்தில் கிராண்ட் ஸ்லாம் வெல்லும் அளவுக்கு உயர்த்தினால் அது எனது பாக்கியமாக கருதுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்