முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வை ஆதரித்து மதுரை ஆதீனம் பிரசாரம் : “ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பது உறுதி”

வியாழக்கிழமை, 5 மே 2016      தமிழகம்
Image Unavailable

தஞ்சாவூர் - தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்சாலையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்கிறேன். காரணம் அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா. அவர் இந்த நாட்டின் ஈடு இணையற்ற தலைவி. அ.தி.மு.க. வில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை ஜெயலலிதா கட்சியை விட்டு அனுப்பி விடுவார்.

பெண்களை போற்றுகிற, மதிக்கிற, பாராட்டுகிற இயக்கம் தான் அ.தி.மு.க. உயர்நிலையை எட்ட திட்டம் போட்டுக்கொண்டு ஜெயலலிதா அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவர் ஆட்சியை பிடிப்பது உறுதி. ஜெயலலிதாவுக்கு இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களும் பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் தான் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறார். நான் இறை தூதர் தான். எத்தனையோ கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிசேகத்தை ஜெயலலிதா நடத்தி உள்ளார். அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

தொடர்ந்து உழையுங்கள். உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் வரும். எனவே அ.தி.மு.க. ஆட்சி வெற்றிபெற இரட்டை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பயத்தி்ல் மதுரை ஆதீனம் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், முதல் அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளேன். அடுத்தவாரம் பிரசாரம் செய்வேன். விஜயகாந்தின் வெற்றி வாய்ப்பு இறைவன் கையில் தான் உள்ளது.
ஆன்மீகம் இல்லையென்றால் அரசியல் இல்லை. அரசியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்