எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு : விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோலிய பொருட்களின் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தலாம் என்ற கொள்கை முடிவை முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணி மேற்கொண்டது. விலை உயர்விலிருந்து மக்களை பாதிப்படையாமல் பாதுகாத்தது அதிமுக அரசு என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றம் மற்றும் புதுவை மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா பேசியதாவது:-
வாக்காளப் பெருமக்களே, விலைவாசி உயர்ந்துள்ளது என்றும், இதற்கு அ.தி.மு.க அரசு தான் காரணம் என்பது போலவும், ஒரு பொய் பிரச்சாரத்தை கருணாநிதியும், திமுக-வினரும் மேற்கொண்டு வருகின்றனர். அகில இந்திய அளவில் பொருட்களின் தேவை மற்றும் அவை கிடைக்கும் அளவு, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை என பல்வேறு காரணங்களால் விலை உயர்வு ஏற்படுகிறது.
இந்த கொள்கைகளில் எதையுமே மாநில அரசு நிர்ணயம் செய்ய இயலாது. இந்த கொள்கைகளையெல்லாம் வகுப்பது மத்திய அரசு தான். எனவே தான், விலைவாசி என்பது அகில இந்திய அளவிலும் கிட்டதட்ட ஒரே அளவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், விலைவாசி ஏற்றத்திலிருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். அது போன்ற திட்டங்கள் இங்கே தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தி வருவதால் தான், விலைவாசியின் தாக்கம் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்காமல் இருக்கிறது.
உர விலையை ஏற்றியது திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு தான். இதற்கு மத்திய அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்தது திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தான். ஆனால், இதில் மாநில அரசு என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து எனது தலைமையிலான அதிமுக அரசு உரத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது. சமையல் எரிவாயுவிற்கான விலையை திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் உயர்த்தி வந்தது. இதை மாநில அரசால் கட்டுப்படுத்த இயலாது.
ஆனால், எனது தலைமையிலான அதிமுக அரசு எரிவாயு சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது. பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்களின் விலை உயர்ந்தால் போக்குவரத்து செலவு அதிகமாகும். அதன் காரணமாக பொருட்களின் விலை உயரும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தது திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தின் தவறான கொள்கையைத் தான் தற்போதைய பாரதிய ஜனதா அரசும் கடைபிடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் மத்திய கலால் வரியை உயர்த்தி விட்டது.
தற்போதைய மத்திய பாரதிய ஜனதா அரசு. டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாய் 57 காசு எனவும், பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 77 காசு எனவும் மத்திய கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது. பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் விற்பனை வரியை உயர்த்தியுள்ளன. ஆனால், எனது தலைமையிலான அதிமுக அரசு விற்பனை வரியை உயர்த்தவே இல்லை. அதே போல, டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்களை அதிமுக அரசு உயர்த்தாமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக 1,556 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல் விலைவாசி உயர்விலிருந்து பொதுமக்களை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அதிமுக அரசு எடுத்து வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றிற்கு 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. வெளிச் சந்தையில், அரிசியின் விலை உயர்ந்த போது கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. காய்கறி விலையைக் கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வெளிச் சந்தையில் பருப்பு வகைகள், மிளகாய், புளி போன்றவை விலை உயர்ந்த போது அவற்றை குறைந்த விலையில் அரசு விற்பனை செய்தது. அதனால் வெளிச் சந்தை விலை குறைந்தது. விலைவாசியில் இருந்து ஏழை எளியோரை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் மினரல் வாட்டர் என்னும் குடிநீர் கிடைத்திடும் வகையில் அம்மா குடிநீர்' பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஏதுவாக அம்மா மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்கப்படும் மருந்துகள் 15 சதவீத அளவிற்கு விலை குறைவாகும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை பராமரிப்புச் செய்வதற்கும் ஏதுவாக, மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சியில் விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.