முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அரசின் முகமூடியை கிழித்து எறியுங்கள் : காங்கிரஸ் போராட்டத்தில் சோனியா காந்தி ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஜனநாயகத்தை கொல்வதாக மோடி அரசு கொல்வதாக சோனியா காந்தி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஜனநாயத்தினை காப்பாற்றுங்கள் என்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில்,ஜனநாயகத்தை மோடி தலைமையிலான அரசு கொலை செய்கிறது .எங்களை மிரட்ட முயற்சிக்காதீர்கள். எங்களை அசிங்கப்படுத்தவும் நினைக்காதீர்கள்.

போராடுவதற்கு வாழ்க்கை எங்களுக்கு கற்றுத்தந்து இருக்கிறது. நாங்கள் பல சவால்களை சந்தித்து இருக்கிறோம்.  மோடி அரசின் முகமூடியை காங்கிரசார் கிழித்து எறிய வேண்டும்என்று அவர் தெரிவித்தார். மோடி அரசிற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் லோக்சபாவின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே ஆகியோரை பாராளுமன்றத்திற்கு வெளியே கோலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், மற்றும் வட இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் ஆட்சியை மோடியின் அரசு வீழ்த்தியது.

இது குறித்து  காங்கிரசார் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விமர்சித்தனர். அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் குறித்து, சோனியா காந்தி பேசியபோது, மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். எதிர் கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்