முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு வழக்கில் வாக்குமூலம்: சிறுமியை ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கிய எம்.எல்.ஏ

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

பனாஜி - கோவா எம்.எல்.ஏ.க்கு சிறுமியை வளர்ப்பு தாய் ரூ.50 லட்சத்துக்கு விற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. கோவா மாநில முன்னாள் மந்திரியும், தற்போதய எம்.எல்.ஏ.வுமான பாபுஷ் என்ற மன்செரட் மீது 16 வயது சிறுமியை கற்பழித்ததாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
நேபாளத்தை சேர்ந்த அந்த சிறுமி அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீர் என்று மாயமான சிறுமியை போலீசார் மீட்டபோது தன்னை பாபுஷ் பல நாட்களாக கற்பழித்து வந்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதையடுத்து போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது சிறுமி கூறியதாவது:- நான் பாபுஷ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். என்னை வளர்ப்பு தாய்தான் வளர்த்து வந்தார்.

அப்போது என்னை பாபுஷ் எம்.எல்.ஏ.க்கு விலைபேசி விற்றுவிட்டார். பாபுஷிடம் இருந்து எனது வளர்ப்பு தாய் ரூ.50 லட்சம் பெற்றதை நான் பார்த்தேன். என் கண்முன்னே என்னை விற்றுவிட்டார். அதன்பின் பாபுஷ் என்னை தனது பொறுப்பில் வைத்துக்கொண்டு தொடர்ந்து பாலீயல் ரீதியாக கொடுமைபட்த்தி வந்தார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல் தப்பி ஓடினேன். அப்போது போலீசார் என்னை மீட்டனர்.  இவ்வாறு அந்த சிறுமி கூறினார். சிறுமிக்கு கோவா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பாபுஷ் எம்.எல்.ஏ மீது கற்பழிப்பு, சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவர் தனது மனைவியுடன் பனாஜி குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் மதியம் சரண் அடைந்தார். அப்போது அவர், “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என் மீது தவறான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பொய் புகார் ஜோடிக்கப்பட்டுள்ளது” என்றார். இதற்கிடையே எம்.எல்.ஏ.வின் செந்த ஊரான தலேகாவ் கிராமத்தில் உள்ள பங்களா முன் பொதுமக்கள் கூடி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்