முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் : கும்பகோணத்தில் மதுரை ஆதீனம் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      தமிழகம்
Image Unavailable

கும்பகோணம் - மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கும்பகோணத்தில் மதுரை ஆதீனம் பிரச்சாரம் செய்தார். கும்பகோண தொகுதி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ரத்னா சேகரை ஆதரித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது:- பெண்களால் நம் நாடு பல்வேறு பெருமைகளை பெற்றுள்ளது. வேட்பாளர் ரத்னாசேகர் கும்பகோணம் நகர சபை தலைவராக இருந்து இந்நகரின் முன்னேற்றத்துக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரின் சேவை தொடர வேண்டும். கும்பகோணத்தில் மகாமக விழா சிறப்பாக நடந்தது.

விழாவை சிறப்பாக நடத்திய பெருமை முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். மக்களுக்காக நான், மக்களால் நான் என அம்மா வாழ்ந்து வருகிறார்கள். மக்களிந் சேவையே குறிக்கோளாக இருப்பதால் இரட்டை இலை சின்னம்தான் மக்களை மேம்படுத்தும். பக்தி உள்ள ஆட்சியில் தான் பண்பாடு, மனித தன்மை, விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை ஆகியவை இருக்கும். மத நல்லிணக்கத்தை கொடுக்கும் ஆட்சி கழக ஆட்சி. மதநல்லிணக்கத்தால் நாடு செழிக்கும்.

அம்மாவின் மக்கள் நலத்திட்டங்களை அனைவரும் பாராட்டு கின்றனர். ஆதலால் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற கழகத்தை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார். கூட்டத்தில் கழக வேட்பாளர் ரத்னாசேகர், கும்பகோணம் நகர கழகச் செயலாளர் ராமநாதன், ஒன்றிய கழகச் செயலாளர் சோழபுரம் அறிவழகன், தொகுதி கழகச் செயலாளர் தம்பி.தேவரத்தினம், பி.எஸ். மனோகரன், ராஜேந்திரன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, குருமூர்த்தி, நகரமன்ற துணைத்தலைவர் ராஜநடராஜன், ரோட்டரி சங்கத்தலைவர் பி.எஸ்.பாபு உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்