முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மலையாள நடிகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை : வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து விசாரணை

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரளாவில் சட்டசபை தேர்தலையொட்டி முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகள் அனைத்தும் வருமான வரித்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய தொழில் அதிபர், ஒரு வக்கீல் ஆகியோரின் வங்கி கணக்குகள் குறித்து வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மலையாள நடிகை ரிமிடோமி என்பவரின் வீட்டுக்கு அதிரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். நடிகையின் உறவினர்கள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. தொழில் அதிபர் மற்றும் வக்கீல் வீட்டிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.

நடிகை ரிமி டோமி மலையாளத்தில் மீசை மாதவன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்பு பட்டணத்தில் சுந்தரன், பஸ் கண்டக்டர், 5 சுந்தரிகள் உள்பட பல படங்களில் நடித்தார். சிங்க மாசம் வந்து சேர்ந்தால் என்ற படத்தில் பாடல்களும் பாடியுள்ளார். இந்த பாட்டு பிரபலமானதை தொடர்ந்து காரியஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் பின்னனி பாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்