எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - நீங்கள் தான் என் மூச்சுக் காற்று, உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தனது தொகுதியான ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக சென்று வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது சென்ற இடமெல்லாம் சாலையின் இருபுறத்திலும் மக்கள் வெள்ளமென திரண்டு அவரை வரவேற்றனர். பலர் மலர்தூவி முதல்வரை வரவேற்றனர். அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்தபடி சென்றார்.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று, தான் போட்டியிடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதியில், சூரிய நாராயண செட்டி தெரு - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு என்ற இடத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், என்னை நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இத்தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள். 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மீண்டும் போட்டியிடுகிறேன். உங்களை சந்தித்து எப்போதும் போல உங்களது பேராதரவை எனக்கு அளித்து, என்னை மீண்டும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்துள்ளேன்.
உங்களது பேராதரவுடன் 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற, எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு, கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலன் காக்கும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பல வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம். மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணாக்கர்கள், இளைஞர்கள், மகளிர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முதியோர்கள் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் தேவையானவற்றை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்து கொடுத்துள்ளது.
ஏழை, எளியோரை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் ஆட்சி பொறுப்பேற்ற போது பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலை இருந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மின்வெட்டினால் எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் என்பதை மறக்கவே முடியாது. அந்த நிலை இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டம்-ஒழுங்கு செம்மையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை, காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நவீன வசதிகளும் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் காக்ரேன் பேசின் சாலை ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை பகுதி மக்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே, நேரு நகர் மற்றும் எழில் நகர் ஆகியவற்றை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பவர் குப்பம் பகுதியில் சிதிலமடைந்த குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, 556 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரங்கநாதபுரம் திட்டப் பகுதியில் 480 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு இங்கு உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சின்ன ஸ்டான்லி மருத்துவமனை என அழைக்கப்படும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி வழங்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. புதிய நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி மக்களின் வசதிக்காக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 28.2.2016 அன்று நான் கலந்து கொண்ட அரசு விழாவில், பல்வேறு பணிகள் 193 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றிட அடிக்கல் நாட்டினேன். இந்தப் பணிகள் எல்லாம் விரைவில் முடிக்கப்படும். இந்தத் தொகுதியில் 30,593 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 306 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த தொகுதியில் வெறும் 43 லட்சம் ரூபாய்க்கான குடிநீர்ப் பணிகளும், 50 லட்சம் ரூபாய்க்கான கழிவுநீர்ப் பணிகளும் தான் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 6 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர்ப் பணிகள் மற்றும் 17 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுநீர் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பூங்காக்கள் போன்ற 1,824 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்தது.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்தத் தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது, நான் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, தேவையான உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உங்களையெல்லாம் நேரில் வந்து சந்தித்து, உங்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்பதை எடுத்துக் கூறினேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இத்தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 97,411 குடும்பங்களுக்கு 48 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளப் பெருமக்களே, எவ்வளவு பெருமழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்கிறேன். உங்கள் ஆதரவுடன் எனது தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
* மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரண திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கென தனி வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவதுடன், கட்டணமில்லாமல் இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும்.
* கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* 100 யூனிட் மின்சாரத்திற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
* ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் திருநாளுக்கு 500 ரூபாய் மதிப்பிலான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறும் வகையில் வெகுமதி கூப்பன்கள் Gift கூப்பன்கள் வழங்கப்படும்.
* அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட் டாப் பாக்ஸ் விலையில்லாமல் வழங்கப்படும்.
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
* திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் என்பதற்குப் பதிலாக, 1 சவரன், அதாவது 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.
* பெண்கள் மொபெட், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலை இல்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.
* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் ஹ, வைட்டமின் னு மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட பால் ஆவின் மூலம் 1 லிட்டர் 25 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்கப்படும்.
* அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். இதன் மூலம், வட்டியில்லாமல் வாரம் 10 ரூபாய் சுலபத் தவணையில் திருப்பிச் செலுத்தும்படி 1,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அரசின் எல்லா சேவைகளுக்கும் இந்த அம்மா பேங்கிங் கார்டை பயன்படுத்த முடியும்.
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, மக்களால் நான், மக்களுக்காகவே நான். உங்களால் நான், உங்களுக்காகவே நான். என் மீது உங்களுக்கு நம்பிக்கை! உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை! தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல,சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க, இடைத் தேர்தலில் என்னை எப்படி வெற்றி பெற வைத்தீர்களோ அதை விட மகத்தான வெற்றியை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து, என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள