எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும்.
9-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் அதிரடி வீரர் கெய்ல் இடம்பெறவில்லை. பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு இக்பாப் அப்துல்லா சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், குர்கீரத்சிங்குக்கு பதிலாக பெஹர்டைன், அனுரீத்சிங் ஆகியோர் இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் எம்.விஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் கண்டனர். லோகேஷ் ராகுல் ஆட்டத்தில் அதிரடி மிளிர்ந்தது. 4-வது ஓவரில் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். 5.1 ஓவர்களில் பெங்களூரு அணி 50 ரன்னை எட்டியது.
அணியின் ஸ்கோர் 63 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய லோகேஷ் ராகுல் (42 ரன்கள், 25 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கரியப்பாவின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அதே ஓவரில் கேப்டன் விராட்கோலி (20 ரன்கள், 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய ஷேன் வாட்சன் (1 ரன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.
இதைத்தொடந்து சச்சின் பேபி, டிவில்லியர்சுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி வேகமாக ரன் சேர்த்தார். அபாரமாக ஆடிய டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கரியப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட டிராவிஸ் ஹெட் (11 ரன்) கடைசி ஓவரில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் சச்சின் பேபி (33 ரன்கள், 29 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா தலா 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய எஸ்.ஆர்.வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப் அணியில் ஹசிம் அம்லா 21 ரன்னிலும், விருத்திமான் சஹா 16 ரன்னிலும், டேவிட் மில்லர் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் எம்.விஜய் 89 ரன்னிலும் (57 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டோனிஸ் 34 ரன்னுடனும், பெஹெர்டைன் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், ஷேன் வாட்சன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்கள். 9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியால் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.
வெற்றி குறத்து விராட் கோலி கூறுகையில்...
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் இந்த வெற்றியை பெற்று 2 புள்ளிகளை பெற்று இருக்கிறோம். டிவில்லியர்ஸ், ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டான் தான் பாராட்டுக்குரியவர். கடைசி 2 பந்தை அவர் மிகவும் அபாரமாக வீசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். பஞ்சாப் அணி வீரர் முரளி விஜய் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அவர் மிகவும் அபாரமாக ஆடினார். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முரளிவிஜய் கூறியதாவது:-
இது கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பாக ஆட்டமாகும். ஆனால் நாங்கள் கடைசி வரை வெற்றிக்கு போராடினோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 175 ரன்னுக்குள் கட்டுபடுத்தி விட்டனர். நாங்கள் திட்டமிட்டு பேட்டிங் செய்தோம். ஸ்டோனிசை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அவரும் இறுதி வரை இருந்தார். ஆனால் வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெங்களூர் அணி 10-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை இன்றும், பஞ்சாப் அணி 11–வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 13-ம் தேதியும் சந்திக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார