முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளரை திட்டிய பிரீத்தி ஜிந்தா !

வியாழக்கிழமை, 12 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : பெங்களூர் அணியிடம் தோல்வி காரணமாக பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அந்த அணியின் பயிற்சியாளரை மோசமாக திட்டியது தற்போது தெரிய வந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் கடந்த திங்கள்கிழமை பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடின. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால், இனி வரும் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு பஞ்சாப் அணியால் தகுதிப் பெற முடியாது. பஞ்சாப் அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததும், ஆந்திரமடைந்த பிரீத்தி ஜிந்தா வேகமாக பஞ்சாப் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு அமர்ந்திருக்கும் டக் அவுட்டிற்கு சென்று, அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சை பங்கரை ஒரு மோசமான ஆங்கில கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். அருகில் வெளிநாட்டு வீரர்களும், இளம் இந்திய வீரர்கள் இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்ஷார் படேலை பேட்டிங் செய்ய களமிறக்காததால் தான் பயிற்சியாளர் பங்கரை பிரீத்தி ஜிந்தா திட்டியதாக கூறப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரகானே போன்ற வீரர்களால் போற்றப்படும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சை பங்கரை பிரீத்தி ஜிந்தா மோசமாக திட்டியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்