முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி - டி வில்லியர்சுக்கு கெயில் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2016      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட பெங்களூர் அணி ஒரு விக்கெட் மட்டுமே விழுந்து 18.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தது. கோலி 51 பந்துகளில் 75 ரன்களும், டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணி 248 ரன்கள் குவித்தது. இதில் டிவில்லியர்ஸ் 129 ரன்களும், கோலி 109 ரன்களும் குவித்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்தனர். இதுவரை பெங்களூர் அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் கோலி 752 ரன்களும், டிவில்லியர்ஸ் 597 ரன்களும் குவித்துள்ளனர். மொத்தமாக இருவரும் இணைந்து 1,349 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், விராட் கோலியும், டி வில்லியர்சும் பேட்மேன் - சூப்பர்மேன் போன்றவர்கள் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். 
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் கெயில் கூறியதாவது.,

மிகவும் அற்புதமானது. கோலியும், டி வில்லியர்சும் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர். பாராட்டு கண்டிப்பாக இருவருக்கும் செல்ல வேண்டும். கோலி தலைமை பண்மை சிறப்பாக மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக இது சிறந்த குழு முயற்சி. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் பங்களிப்பு செலுத்திய வீரர்களின் முயற்சி. தொடர்ந்து அவர்கள் வெற்றியை நோக்கி இட்டுச் செல்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்