எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, கட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த புதுச்சேரி ரங்கசாமிக்கு மீண்டும் ஆட்சியைத் தர பொதுமக்கள் மறுத்து இந்த தேர்தல் மூலம் மவுனமாக தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்தது ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. பின் 2011-ல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார் அவர்.
உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. புதுச்சேரி வளர்ச்சியடையும், தொழில்கள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பிரச்சினைக்கும் எவ்வித தீர்வும் இல்லாத நிலைதான் உருவானது.
முதல்வர் ரங்கசாமி ஆட்சியமைத்தவுடன் மத்தியில் இருந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு வரவேண்டிய நிதியை நாராயணசாமி தடுப்பதாக குற்றம் சாட்டினார். இப்படியே 3 ஆண்டுகள் கழிந்தது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி வந்த பிறகும் ஏதும் நடக்கவில்லை. ஏ.டி.எம் இயந்திரத் தொழிற்சாலை, சாப்ட்வேர் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசு சார்பு நிறுவனங்களில் பலருக்கு மாத ஊதியம் தரப்படவில்லை. ரேஷனில் அரசிக்கு பதிலாக பணம் தரும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ரங்கசாமி அதை திரும்ப பெற்றார்.
மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு, குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் தொடர்புடையோர் கைது செய்யப்படாமல் உள்ள சம்பவம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பல பிரச்சினைகள் முக்கிய காரணமாக அமைந்தது. உணவுப் பொருட்களின் விலை தமிழகத்தை விட கடுமையாக உயர்ந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக முன்பெல்லாம் விழுப்புரம், கடலூர் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பொருட்கள் வந்த காலமெல்லாம் உண்டு தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
மதிப்பு கூட்டு வரியான 'வாட் வரி' விதிப்பிற்கு பிறகு வந்த மாற்றம் இது என்றாலும் அது ரங்கசாமியின் ஆட்சியால் வந்த மாற்றம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவானது. பல தனியார் பள்ளிகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தியும் அரசு கண்டுகொள்ளவே இல்லை. அரசு பள்ளிகளில் கட்டட வசதி மோசமாக இருந்தும் அரசு அதை சரிசெய்யவே இல்லை.
டெல்லி சென்று மத்திய அரசு தரப்பை சந்திக்கவும் இல்லை. நிதியை பெற நடவடிக்கை எடுக்கவும் இல்லை. மருத்துவம், பொறியியலில் ஒருங்கிணைந்த அரசு மாணவர் சேர்க்கை மூலம் தேர்வாகும் மாணவருக்கு அரசு நிதியுதவி தருகிறது. ஆனால், அதை விட பல மடங்கு கட்டணத்தை தனியார் மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கின்றன. அதையும் அரசு கொள்ளவில்லை. இதுபோல் பல பிரச்சினைகளால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் உள்ளூரில் இருந்து உருவான அரசு தீர்க்கும் என காத்திருந்தனர் புதுச்சேரி மக்கள். ஆனால், பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை.
இலவச மிக்சி, கிரைண்டர் லேப்டாப் மட்டும் ஐந்தாண்டு ஆட்சியின் இறுதி கட்டத்தில் தந்தார் ரங்கசாமி. இந்த தேர்தல் அறிக்கையில் கூட, 'வீட்டுக்கு வீடு இலவச வாஷிங்மிஷின் தருவோம்' என்று குறிப்பிட்டார். ஆனால் அதை கண்டுகொள்ளவே இல்லை மக்கள்.
'நாலரை ஆண்டுகள் அமைதியாக எந்த சிக்கலையும் தீர்க்காமல் இருந்து விட்டு கடைசி நேரத்தில் இலவச பொருட்களை தருவதில் என்ன மாதிரியான சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும்?' மக்களின் இந்த மன ஓட்டமே புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "புதுச்சேரியில் அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அரசு துறைகளில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதும் இக்கோபத்துக்கு முக்கியக் காரணம். வேலைவாய்ப்பு முக்கிய பிரச்சினையாகியுள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லைப்புறமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பிறகு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நீக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்ததாக பலரும் குறிப்பிடுகின்றனர்.'' இதெல்லாம் கூட தோல்விக்கான காரணங்களாக அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
"கடந்த மக்களவைத் தேர்தலின் போது திறக்கப்பட்ட நவீன மீன் அங்காடி நடைமுறைக்கே வரவில்லை. புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விமான நிலையம் மூடியே கிடக்கிறது. பல முக்கியத் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்றடையவில்லை. குறிப்பாக தமிழகத்தில் நடப்பது போல் திங்கள்கிழமை தோறும் குறைதீர் கூட்டத்தை அதிகாரிகள் இங்கு நடத்துவதே இல்லை. இதெல்லாம் கூட காரணங்கள்" என்கின்றனர் அரசு அலுவலர்கள்.
"தொண்டர்களுக்கு கட்சி அடையாள அட்டைக்கூட தரவில்லை. தொகுதி நிர்வாகிகள் கூட நியமிக்கப்படவில்லை. வேறு என்ன சொல்ல?" என்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள். இப்படியாக பலமுனை அதிருப்திகள் ஒன்று சேர்ந்து படர்ந்து செழித்து நிமிர்ந்து நிற்க வேண்டிய ஒரு உள்ளூர் அரசியல் கட்சியை அடியோடு சாய்த்திருக்கிறது.
'மத்திய அரசுடன் இனக்கமான ஒரு போக்கை கடைப்பிடித்து மாநில அரசுக்கான வளர்ச்சியை பெற வேண்டும்.' வளர்ச்சிக்கான இந்த இலக்கணம் மாநில அரசுக்கு பொருந்துமோ இல்லையோ மத்திய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருக்கிற யூனியன் பிரதேசத்துக்கு நிரம்பவே பொருந்தும்.
இந்த கூற்றை மெய்ப்பித்திருக்கிறார் ரங்கசாமி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.