முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் 110க்கும் மேற்பட்டோர் பலி

திங்கட்கிழமை, 23 மே 2016      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  - சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களில் பலர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவின் லட்டாகியா  மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரான ஜப்லெஹ் என்ற பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிறுவனத்திற்கு அருகில் இந்த தாக்குதல்கள்  நடந்துள்ளதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது  அருகேதான் ரஷ்யாவின் கமிமிம் விமான தளம் மற்றும் தர்டஸ் கடற்படை தளம் உள்ளது.  பல இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், பலர் பலியாகியிருக்க வாய்ப்புள்ளது என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளன.

இது போல் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாகவும்,  இதில் 110  க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் தீவிரவாத அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு இஸ்லாமிய குழுவான அஹ்ரர் ஷாம் அல்-இஸ்லாமியா பொறுப்பு ஏற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்