முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை செய்து கொல்ல சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபர் கவலைக்கிடம்

திங்கட்கிழமை, 23 மே 2016      உலகம்
Image Unavailable

சாண்டியாகோவில்  - தற்கொலை செய்து கொல்லும் நோக்கில் சிங்க கூண்டுக்குள்  இறங்கிய வாலிபரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் அமைந்துள்ள சில்யன் தேசிய விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாரத  வண்ணம்,பிரான்கோ லூயிஸ்  பெரடா ரோமன் வயது 20 என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார். கூண்டிற்குள் ஆண் பெண் சிங்கங்கள் இருந்துள்ளன, முதலில் அந்த நபருடன் விளையாட ஆரம்பித்த சிங்கங்கள் பின்னர், தங்களது தாக்குதலை ஆரம்பித்தன, பொதுமக்கள் முன்னிலையில் அந்த நபரை சிங்கங்கள் வேட்டையாட, பதிலுக்கு அந்த நபரும் சிங்கத்துடன் மல்லுக்கட்டியுள்ளார்.

இந்த சண்டையினை பார்க்கமுடியாமல் மக்கள் அச்சத்தில் அலறியுள்ளனர், விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துப்பாக்கியால் சுட்டதில் சிங்கங்கள் இரண்டும் உயிரிழந்தன.அதன் பின்னர் மோசமாக காயமடைந்திருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உயிர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பூங்காவின் இயக்குனர் மவுரிகோ பேபர் கூறியதாவது:- பூங்காவிற்கு வரும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்போம், கூட்டம் மிகுதியாக இருந்ததால் எங்களால் இதனை தடுக்க முடியவில்லை.இருப்பினும், அந்நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிங்கத்தினை சுட்டத்தில் அது உயிரிழந்துவிட்டது, அந்நபர் தற்கொலை செய்யும் நோக்கிலேயே சிங்கத்தன் கூண்டிற்குள் குதித்திருக்க வேண்டும் என உறுதியாக தெரிகிறது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்