முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 87 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 23 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுகிழமை வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடை விடுமுறை என்பதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று அதிகாலை 5 மணி நிலவரப்படி 87 ஆயிரத்து 23 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துகான வைகுண்டம் மையத்தில் 31 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 16 அறைகளில் காத்திருந்து 9 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். 

ஞாயிற்றுகிழமை காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3.10 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிக அளவு இருந்ததால் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகளையும், கோயிலுக்கு உள்ளே செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் லட்டு தயாரிக்கும் மடப்பல்லியிலும், பூந்தி தயாரிக்கும் மையத்தையும் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்