முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக போலீஸ் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சென்னை போலீஸ் கமிஷனராக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

* சென்னை போலீஸ் கமிஷனராக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சிறைத்துறை இயக்குனராக உள்ளார்.

* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய சேர்மனாக பணியாற்றும் டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ், சிறைத்துறை இயக்குனர் பணியை முழு நேர பணியாக சேர்த்து கவனிப்பார்.

* சென்னை போலீஸ் கமிஷனராக தற்போது பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ்சுக்லா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

* மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக தற்போது பணியாற்றும் ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

* சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பில் உள்ள டாக்டர் சி.சைலேந்திரபாபு, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மாநில உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகிக்கும் கரன்சின்கா, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தி பொறுப்பு ஏற்பார்.

* தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்த திருநாவுக்கரசு மாற்றப்பட்டார். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்