முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ படிக்க விருப்பம்: எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவன் சிவக்குமார் பேட்டி

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்  - சி.ஏ படிக்க விரும்புவதாக மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனைபடைத்த விருதுநகர் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.சிவக்குமார் தெரிவித்துள்ளான். இதுபற்றிய விபரம் வருமாறு:- 10-ம் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. விருதுநகர் பெரியவள்ளிக்குளத்தில் அமைந்துள்ள நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.சிவக்குமார் மாநில அளவில் 499 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தார். இவர் தமிழில் மட்டும் 99 மதிப்பெண் பெற்றுள்ளார் மற்ற அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவன் சிவக்குமாரின் தந்தை வங்கியில் பணியாற்றுகிறார். இந்த தேர்வு வெற்றி குறித்து மாணவன் ஆர்.சிவக்குமார் தெரிவிக்கையில்., தன்னை பள்ளி முதல்வர் மிகவும் ஊக்கப்படுத்தியதாலும், ஆசிரியர்கள் ஆலோசனை, அறிவுரை, மூலமாகவும். எழுத்துத்தேர்வு வைப்பதாலும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தியதாலும், எனக்கு அடிக்கடி பாட சம்மந்தமாக கேள்விகள் கேட்டும், தேர்வு வைத்ததும் எனதுவெற்றிக்கு காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தான் இரவு 9 மணி வரை படித்ததாகவும், அதிகாலையில் எழுந்து படிப்பதாகவும், அனைத்தையும் புரிந்து படித்ததால் வெற்றி பெற முடிந்ததாக தெரிவித்தார். மேலும் தனது வெற்றி இலக்கை வீட்டில் தினந்தோறும் பார்க்கும் பகுதிகளில் ஒட்டி வைத்திருந்ததாகவும் அது தனக்கு ஊக்கமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் 11-ம் வகுப்பில் காமர்ஸ் அக்கவுண்டன்சி குருப் எடுத்து  சி.ஏ படிக்க போவதாக தெரிவித்தான். வெற்றி பெற்ற மாணவன் சிவக்குமாரை பள்ளி ஆசிரியர்கள், முதல்வர், தாளாளர், மற்றும் பெற்றோர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்