எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலி, வாழ்த்துக்களுடன் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக 2–வது முறையாக ஆட்சியை பிடித்தது இப்போதுதான். அந்த வரலாற்று சாதனையை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி இருக்கிறார்.
6–வது முறையாக முதல்வராக பதவி ஏற்றும் ஜெயலலிதா சாதனை புரிந்திருக்கிறார். கடந்த 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முதல்வருடன் 28 அமைச்சர்களும் அன்றைய தினம் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார். அவர் 23–ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்நிலையில்
15-வது சட்டமன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், தற்காலிக சபாநாயகர் செம்மலை, சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து நேற்று 15-வது தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. சட்டசபை மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்ட சபையில் உள்ள அனைத்து தலைவர்கள் படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வந்து அமர்ந்தனர். அமைச்சர்கள் அனைவரும் முதல் மற்றும் 2–வது வரிசையில் அமர்ந்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா காலை 10.53 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அவர் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல்வர் ஜெயலலிதா தனது இருக்கையில் 10.54 மணிக்கு அமரும் முன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை சபைக்குள் வந்தார்.
‘‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந்துறும்’’
என்ற திருக்குறளை படித்த அவர், ‘‘என் மக்களை உயர்த்துவேன் என்று மிகுந்த மன உறுதியுடன் முயற்சி செய்யும் ஒருவருக்கு தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்து அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று திருக்குறளுக்கான பொருளையும் சொன்னார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் அவர் தலைமையின் கீழ் தமிழ்நாட்டை உயர்வடைய செய்வோம் என்றும் தற்காலிக சபாநாயகர் செம்மலை பேசினார். இதன் பின்னர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் தொடர்ந்து சபை நிகழ்ச்சியை செம்மலை நடத்தினார்.
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் பேரவை அலுவல்களை ஏற்று நடத்தும் வகையில் கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினராக அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இன்று (நேற்று) இங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திடுகிறேன் என்று கூறி எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்ததற்கான பதிவேட்டில் செம்மலை கையெழுத்திட்டார்.
முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் துணை சபாநாயகர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி எடுத்து கொள்வர். உறுதிமொழியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எடுத்து கொள்ளலாம். உறுதிமொழி வாசகம் மட்டுமே படிக்க வேண்டும். உறுதிமொழியை உளமாற உறுதி என்றும், கடவுள் அறிய என்றும் வாசகம் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை படித்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உறுதிமொழி எடுக்கும் கடமை புனிதமானது. எனவே அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் செம்மலை கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுப்பதற்கு முதலாவதாக முதல்வரை அழைக்கிறேன் என்று செம்மலை கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.
சபாநாயகர் இருக்கைக்கு முன் சிறிய சாய்வு மேஜையுடன் மைக் வைக்கப்பட்டிருந்தது. தனது இருக்கையில் இருந்து அங்கு வந்து எம்.எல்.ஏ.வாக முதல்வர் ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். காலை 11.09 மணிக்கு அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சட்ட பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா என்னும் நான், சட்ட முறைப்படி நிறுவப் பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார். பின்னர் எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சபாநாயகர் முன்பு எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் இ.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.பி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, பா.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 28 அமைச்சர்களும் எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்தார்கள். அனைவரும் கடவுள் அறிய என்று உறுதிமொழி எடுத்தனர்.
இதன் பின்னர் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் பதவி ஏற்றார்கள். இதனை அடுத்து முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உறுதிமொழி எடுத்தனர். பகல் 11 மணிக்கு தொடங்கி பதவியேற்பு விழா பிற்பகல் 2.22 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 230 எம்.எல்.ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.