முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் மனைவியை கொன்ற இந்தியர் கைது

வியாழக்கிழமை, 26 மே 2016      உலகம்
Image Unavailable

ஒட்டவா - கனடா நாட்டில் மனைவியை கொன்ற இந்தியாவை சேர்ந்த சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் பல லட்சம் சீக்கிய மக்கள் வசிக்கிறார்கள். கனடா நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்று குடியேறியவர்கள். அங்குள்ள ரீஜினா என்ற இடத்தில் ஜெகதீஷ்சிங் (வயது 39) என்பவர் தனது மனைவி சந்தீப் கவுர் (38) என்பவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கனடாவின் மற்றொரு இடத்தில் உள்ள ஜெகதீசின் சகோதரர் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் சந்தீப் கவுர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். முதலில் அவரை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது. போலீஸ் விசாரணையில் கணவரே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago