முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிட்ட 30 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      உலகம்
Image Unavailable

ரியோ டி ஜெனிரோ - பிரேசிலில் பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பின் தங்கிய பகுதியில் உள்ள தனது காதலரின் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு ஆண் நண்பர் அந்த பெண்ணூக்கு போதை மருந்து கொடுத்து பல நண்பர்களுடன் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மறுநாள் நிர்வாண கோலத்தில் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ளார். தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து  வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்து அந்த பெண்ணின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

பல்வேறு பெண்கள் அமைப்புகள் இதற்கு எததிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன இந்தச் சம்பவம் பிரேசிலில் பாலியல் வனமுறை கலாச்சாரம் குறித்த இணைய விவாதத்தை தூண்டியுள்ளது.  பிரேசில் நாட்டில் கடந்த் 2014-ம் ஆண்டு  47,636 பாலியல பலாத்கார சம்பவங்கள் நடைபெற்ற போதும், இதில் 35 சதவீதம் தான் வழக்காக பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்