முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டபோது, ஈரான் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் 5 பேரும் 23-4-2016 அன்று சவுதி அரேபியாவின் காத்திப் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது கவனக்குறைவாக ஈரானிய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர். இதனால் அவர்களை ஈரானிய கடலோர காவல்படை கைது செய்து டெஹ்லோரன் மத்திய சிறையில் அடைத்துள்ளது.  இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, இந்திய தூதரகம் மூலம் அப்பாவி மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க உறுதியான நடவடிக்கை வேணடும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago