முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சந்திப்பு

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.  இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதல்வருமான ஜெயலலிதாவை, சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.தி.மு.க  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள உப்பளம் தொகுதி - அன்பழகன், முதலியார்பேட்டை தொகுதி - பாஸ்கர், காரைக்கால் தெற்கு தொகுதி - அசனா, முத்தியால்பேட்டை தொகுதி  - வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்வின் போது, கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க  செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத், புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர்  வெ.புருஷோத்தமன், கர்நாடக மாநில அ.தி.மு.க  செயலாளர் வா.புகழேந்தி, விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, எம்.பி. ., ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்