முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      உலகம்
Image Unavailable

ஷிமோ : இலங்கைத் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் மாநாடு ஜப்பானின் ஷிமோ நகரில் கடந்த 26, 27 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்றார்.  ஜப்பானில் வாழும் இலங்கை மக்கள் சார்பில் சிறிசேனாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது சொந்த நிலங்களை இழந்துள்ளனர். அதை திரும்பப் பெற சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் நிலங்களும் திரும்ப ஒப்படைக்கப்படும். ஒருவேளை உங்கள் நிலம் ராணுவத்தின் வசம் இருந்தால் உங்களுடைய மனநிலை என்னவாக இருக்கும், அதேநிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago