முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ‘உலகெங்கும் உள்ள இந்திய தூதர்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து செயல்படவேண்டும்’ என, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்களின் வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சுமார், 120-க்கும் அதிகமான இந்திய தூதர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பிரதான முன்னுரிமை அளித்து தூதர்கள் செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தியதாக, வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் நோக்கத்தை புரிந்து கொள்ள இம் மாநாடு சிறந்த வாய்ப்பாக அமைந்தது’ என, வெளியுறவுத்துறை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாகவும், விகாஸ் ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்